Friday, March 30, 2012

Electricity bill increase

மின் கட்டணம் உயர்வு குறித்து முழு தகவலை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதில் 37 விழுக்காடு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண உயர்வு குறித்த முழு விபரம்....

மாதம் தோறும் நிலைக்கட்டணமாக நுகர்வோர் ரூ. 10 மின்சார வாரியத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது. 2 மாதத்திற்கு 20 ரூபாய் மின்கட்டணத்தோடு செலுத்த வேண்டி இருக்கும்.

மற்றப்படி, வீடுகளில் மின்கட்டணம் முதல் 100 யூனிட் வரை - ரூ.1.10,
101-200 யூனிட் வரை - ரூ.1.80,

200 - 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு

முதல் 200 யூனிட்டுக்கு ரூ.3 வசூலிக்கப்படும்.

201 - 500 யூனிட் வரை ரூ.3.50 வசூலிக்கப்படும்

501 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.75 வசூலிக்கப்படும்

விசைத்தறி கூடங்களுக்கு முதல் 500 யூனிட்டுக்கு கட்டணம் இல்லை. 500க்கு மேல் யூனிட்டுக்கு ரூ.4 வசூலிக்கப்படும்

வழிபாட்டுத்தலங்களுக்கு 120 யூனிட் வரை தலா ரூ.2.50 வசூலிக்கப்படும். 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5 வசூலிக்கப்படும்.

குடிசைத்தொழில், சிறு தொழில்களுக்கு 500 யூனிட் வரை ரூ. 3.50 கட்டணம் வசூலிக்கப்படும். 501 மேல் ரூ. 4 கட்டணம் வசூலிக்கப்படும்

தொழிற்சாலைகளுக்கு யூனிட்டிற்கு ரூ.5.50 வசூலிக்கப்படும்

வர்த்தக நிறுவனங்களுக்கு 1-100 யூனிட் வரை ரூ. 4.30 கட்டணம் வசூலிக்கப்படும். 101 யூனிட்டுக்கு மேல் ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்படும்.

குடிசை தொழில், சிறு தொழில்களுக்கு 100 யூனிட் வரை ரூ.3.50 எனவும்,
100க்கு மேல் ரூ. 4 எனவும் வசூலிக்கப்படும்.

தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம், ஐ.டி. நிறுவனங்களிடமிருந்தும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது யூனிட்டுக்கு ரூ. 5.50 வசூலிக்கப்படும்.

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலங்கார விளக்குகள் பயன்படுத்துவோர் யூனிட்டிற்கு ரூ. 10.50 செலுத்த வேண்டும்.

இந்த கட்டண நிர்ணயமானது வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.



Table: Existing and new tariff (Low tension supply)
Table: Existing and new tariff (High tension supply)
Enclosed the report given by TNERC

What is the Difference Between NTSC and PAL?


          Some Americans may have sent video home movies to a European relative, only to discover that the images are scrambled and the sound quality is very poor. This is caused by a major difference in broadcast formats used by the United States and many other countries. The United States favors a format called NTSC, which is short for National Television Standards Committee, while Europe, Australia and parts of Asia use a competing format called PAL, or Phase Alternating Line.
          Most of us would not be able to recognize the difference between NTSC and PAL, but then again most of us aren't television broadcast engineers. The differences really start with the electrical power system behind the transmissions. In the United States and other countries, electrical power is generated at 60 hertz, so for technical reasons the NTSC signal is also sent out at 60 'fields' per second. Since most televisions use an interlaced system, this means that 30 lines of the image are sent out, followed by the alternating 30 lines. This line alternation happens so fast that it becomes undetectable, much like a film running through a projector. The result for an NTSC television is 30 frames of a complete image appearing every second.
         Since Europe uses a 50 hertz power supply, the equivalent PAL lines go out at 50 fields per second, or 25 alternating lines. PAL televisions only produce 25 complete frames per second, which can cause some problems with the proper display of motion. Think of it as the 'silent movie effect', in which the actors seem to move a little faster because there are fewer frames showing movement. If a PAL movie is converted to an NTSC tape, 5 extra frames must be added per second or the action might seem jerky. The opposite is true for an NTSC movie converted to PAL. Five frames must be removed per second or the action may seem unnaturally slow.
        Another difference between NTSC and PAL formats is resolution quality. PAL may have fewer frames per second, but it also has more lines than NTSC. PAL television broadcasts contain 625 lines of resolution, compared to NTSC's 525. More lines usually means more visual information, which equals better picture quality and resolution. Whenever an NTSC videotape is converted to PAL, black bars are often used to compensate for the smaller screen aspect, much like letterboxing for widescreen movies.
When the NTSC format was first adopted in 1941, there was little discussion of color transmissions. When the technology for color television arrived, engineers had to create a broadcast method which would still allow owners of monochrome television sets to receive a picture. Color signals on the NTSC format are still not considered ideal by electronics experts. The PAL system, on the other hand, was created after the advent of color broadcasting, so color signals are much truer to the original image.
       For most purposes, the difference between NTSC and PAL signals are negligible. A European television set won't work in the United States and an NTSC formatted DVD won't play on a PAL player. But many people own home movies which cannot be viewed on a competing format. For this reason, there are a number of companies which offer conversion kits from NTSC to PAL or PAL to NTSC. Some of these conversion methods can be time-consuming and variable in quality, but others provide an easy way to create a PAL video for a European relative or an NTSC DVD for a Canadian friend. Some electronic media outlets may also provide conversion services for a price.

Wednesday, March 28, 2012

நிம்மதியான தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?


    ஒரு சிலர் அதிக நேரம் தூங்குவார்கள். ஆனால் அசதியாக இருப்பார்கள். சிலரோ குறைவான நேரம் தான் தூங்குவார்கள். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.  ஆழ்ந்த தூக்கமே (சவுண்ட் சிலீப்) இதற்கு காரணம். நிம்மதியான தூக்கம் வர இடது கை கீழே இருக்கும்படி ஒருக்களித்து படுத்து உறங்க வேண்டும். ஏனென்றால்  இடது பக்கமாகப் படுத்திருக்கும்பொழுது உடல் அந்த பாகத்தை அழுத்துகிறது. இதனால் சுவாசம் வலதுநாசி வழியாகத்தான் வரும். இடதுநாசி வழியாக வராது. வலதுநாசி வழியே மூச்சு வந்தால், மனநிலை அமைதியாக- நல்ல நினைவுகள் உள்ளதாக இருக்கும் என்று நாடி சாஸ்திரம் சொல்லுகிறது. படுக்கும்போது இடதுபக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவதற்கு இதுவே காரணம். என்ன தூங்க கிளம்பிட்டீங்களா.

Monday, March 26, 2012

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்

 

தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள்

ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி 

ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு

7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்

சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி

மதுரை மாநகராட்சியில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 250 கோடி

மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்

1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்

கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா நாப்கின்கள் வழங்க ரூ. 55 கோடி ஒதுக்கீடு

மதுரை, கோவையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்

அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களைப் புதுப்பிக்க ரூ. 6.83 கோடி

தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருது

தமிழ் ஆராய்ச்சிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு

புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 750 கோடி ஒதுக்கீடு

மருத்துவத் துறைக்கு ரூ. 5569 கோடி

பழனி, ஸ்ரீரங்கம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்-புதிய திட்டம்

1006 கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மூலம் புதுப்பிக்கப்படும்

மேலும் 50 கோவில்களுக்கு திருக்கோவில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கோவில் சொத்துக்களை மீட்கர நடவடிக்கை எடுக்கப்படும்

தானே புயல் பாதித்த பகுதிகளில் மின் கட்டமைப்பை சீரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு

ரூ. 8000 கோடியில் உடன்குடி மின் திட்டம் செயல்படுத்தப்படும்

உடன்குடி திட்டத்திற்கு ரூ. 1500 கோடி ஒதுக்கீடு

வெளி மாநிலத்திலிருந்து மின்சாரம் கொண்டு வர வழியில்லை

புதிய பேருந்துகள் வாங்க ரூ. 508 கோடி நிதி

அனைத்துப் அரசு பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் முறை அமல்

மோனோ ரயில் திட்டத்தில் 4வது வழித்தடமாக வண்டலூர்-புழல் இணைக்கப்படும்

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

விரைவில் சென்னையிலும் அரசு கேபிள் சேவை

2வது கட்ட சென்னை புற வழிச் சாலை மேம்பாட்டுத் திட்டம்- மாநில அரசே நிறைவேற்றும்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்கு மாற்றப்படும்

ரூ. 20 ஆயிரம் கோடியில் புதிய முதலீடுளை ஈர்க்க புதிய திட்டம்

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

உணவு மானியத்திற்கு ரூ. 4900 கோடி ஒதுக்கீடு

துவரை உள்ளிட்ட பருப்புகள் சலுகை விலையில் தரப்படும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்

ரூ. 50 கோடியில் விலைக் கட்டுப்பாட்டு நிதியம்

3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்

காண்டூர் கால்வாய் திட்டம் 2013 ஆகஸ்ட்டில் நிறைவடையும்

காவிரி உள்ளிட்ட நதி நீர்ப் பிரச்சினைகளில் தமிழக உரிமை பாதுகாக்கப்படும்

நதி நீர் இணைப்புக்கு ரூ. 50 கோடி ஒதுக்கீடு

அணைகளை மேம்படுத்த ரூ. 50 கோடி 

விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்

49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தர நீதிமன்றங்களாக்கப்படும்.

2012-13ல் 1 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும் 

விவசாயிகளின் வட்டி்ச சலுகைக்கு ரூ. 160 கோடி ஒதுக்கீடு

சங்கரன்கோவில், விழுப்புரத்தில் கறிக்கோழி, முட்டைக் கோழி வளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம்

கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ. 814.03 கோடி ஒதுக்கீடு

ரூ. 244 கோடியில் 12,000 பேருக்கு கறவைப் பசுக்கள், 1.5 லட்சம் பெண்களுக்கு தலா 4 வெள்ளாடு அல்லது செம்மறியாடு

நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி

10 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்

ஓட்டுப் பயிற்சிப் பள்ளி அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு

நீதித்துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 736 கோடி

வேளாண்துறைக்கு ரூ.3804.96 கோடி ஒதுக்கீடு

சாலைப் பாதுகாப்பு நிதி ரூ. 65 கோடி உயர்வு

டி.கல்லுப்பட்டி, ஆலங்குளம், சின்னசேலத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தீயணைப்புத் துறைக்கு ரூ. 197.58 கோடி ஒதுக்கீடு

ரூ.400 கோடியில் 4340 கூடுதல் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்

சென்னை போக்குவரத்துக் காவலுக்கு 87 கூடுதல் ரோந்து வாகனங்கள் ஒதுக்கீடு

சென்னையில் ரூ. 150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மைத் திட்டம்

ரூ. 20.75 கோடியில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க 25 சிறப்பு நீதிமன்றங்கள்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ. 22.49 கோடியில் லேப்டாப், பிரிண்டர்கள் வழங்கப்படும்

ரூ. 1.93 கோடியில் தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள்

பேரிடர்களை சமாளிக்க சிறப்புப் பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.

தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டத் திருத்தம்

தானே புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வீடுகள் கட்ட ரூ. 1000 கோடி ஒதுக்கீடு

பட்ஜெட் உரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு

தொடர்ந்து 5 நிமிடம் ஜெயலலிதாவைப் பாராட்டி புகழ் மாலை 'பாடினார்' ஓ.பன்னீர் செல்வம்!

சங்கரன்கோவில் வெற்றி: ஜெயலலிதாவை பாராட்டி சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நீண்ண்ண்ண்ட நேரம் மேசைத் தட்டு!


In pdf

Friday, March 16, 2012

கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?





(கட்டுரை – 7)
(ஜூன் மாதம் 8, 2011)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.
தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]
மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)
இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.
அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)
கட்டுரை ஆசிரியர்
“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”
நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”
பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)
நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.

அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.
லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)
“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.
விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?
ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.

கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.
1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா
அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.
2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.

கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.
செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.
ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.

இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)
1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.
2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.
அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.

விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.
2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.
1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.

2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.
3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.

4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.
5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.
திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.
6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.

(தொடரும்)
**************
China Syndrome* – The China Syndrome is a 1979 American thriller film that tells the story of a reporter and cameraman who discover safety coverups at a nuclear power plant.
The title is a fanciful term – not intended to be taken literally – that describes one possible worst-case result of a nuclear meltdown, where reactor components melt through their containment structures and into the underlying earth, “all the way to China” (</wiki/China_Syndrome>).
***************
தகவல்:
1. Russia & India Report -  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)
2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)
3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)
4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)
5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)
6. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)
7. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)
8. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)
9. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)
10. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)
11 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)
12. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)
13. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)
14 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)
15. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)
16. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)
17  2011 Fukushima’s Nuclear Accident is not Chernobyl (March 18, 2011)
18 Kudankulam Nuclear Plant Equipped to deal with Tsunami Threats By : Vinson Kurian (April 3, 2011) Kerala State Centre of The Institution of Engieers (India) – IEI
19. Three-Month Update of Fukushima Tragic Accident & Flood of Information Coming Out (June 16, 2011)
20.  http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)
************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) July 2, 2011
http:jayabarathan.wordpress.com/

http://epaalam.blogspot.in/ 

Tuesday, March 6, 2012

What is MCC and MNC?




Mobile Network Code (MNC) is used in combination with a Mobile Country Code (MCC) (also known as a “MCC / MNC tuple”) to uniquely identify a mobile phone operator/carrier using the GSM, CDMA, iDEN, TETRA and UMTS public land mobile networks and some satellite mobile networks. The ITU-T Recommendation E.212 defines mobile country codes. The MCC/MNC is part of the IMSI defining the country and provider – it’s often used to check if a certain card is allowed to be used in a certain mobile, many mobile phone carriers lock their phones so only their cards can be used in the phones they sell together with contracts or in a prepaid bundle. uaSIM can “emulate” any carriers card on this planet, the user is free to define any MCC/MNC combination by the pin code entry at power up. Even combination’s that do not exist (yet) ! Note that uaSIM is for repairs, testing and activation of mobile phones – also uaSIM is not able to log into any carriers network.
You can follow the below wiki link to find any MCC and MNC that you want to use for your uaSIM.
( For some carriers that have multiple MCC/MNC combination’s check if the networks are operational, non operational networks you normally won’t need )