| SI UNITS & SI UNIT SYMBOLS | ||
|---|---|---|
| SI UNIT NAME | SI UNIT SYMBOL | QUANTITY MEASURED |
| ampere |
A
| Electric current |
| ampere per meter |
A/m
| Magnetic field strength |
| ampere per square meter |
A/m^2
| Current density |
| becquerel |
Bq s^-1
| Activity - of radionuclide |
| candela |
cd
| Luminous intensity |
| candela per square metre |
cd/m^2
| Luminance |
| coulomb |
C s ⋅ A
| Electric charge, quantity of electricity |
| coulomb per cubic metre |
C/m^3
| Electric charge density |
| coulomb per kilogram |
C/kg
| Exposure (x rays & gamma rays) |
| coulomb per square metre |
C/m^2
| Electric flux density |
| cubic metre |
m^3
| Volume |
| cubic metre per kilogram |
m^3/kg
| Specific volume |
| degree Celsius |
°C
| Celsius temperature |
| farad |
F C/V
| Capacitance |
| farad per metre |
F/m
| Permittivity |
| gray |
Gy
| Absorbed dose, specific energy imparted, absorbed dose index |
| gray per second |
Gy/s
| Absorbed dose rate |
| henry |
H Wb/A
| Inductance |
| henry per metre |
H/m
| Permeability |
| hertz |
Hz s^-1
| Frequency |
| joule |
J N⋅m
| Energy, work, quantity of heat |
| joule per cubic metre |
J/m^3
| Energy density |
| joule per kelvin |
J/K
| Heat capacity, entropy |
| joule per kilogram |
J/kg
| Specific energy |
| joule per kilogram kelvin |
J/(kg⋅K)
| Specific heat capacity |
| joule per mole |
J/mol
| Molar energy |
| joule per mole kelvin |
J/(mol⋅K)
| Molar heat capacity, molar entropy |
| kelvin |
K
| Absolute temperature, sometimes referred to as thermodynamic temperature |
| kilogram |
kg
| Mass |
| kilogram per cubic metre |
kg/m^3
| Density, mass density |
| lumen |
lm
| Luminous flux |
| lux |
lx lm/m^2
| Illuminance |
| metre |
m
| Length |
| metre per second |
m/s
| Speed, velocity |
| metre per second squared |
m/s^2
| Acceleration |
| mole |
mol
| Amount of substance |
| mole per cubic metre |
mol/m^3
| Concentration |
| newton |
N
| Force |
| newton metre |
N⋅m
| Moment of force |
| newton per metre |
N/m
| Surface tension |
| ohm |
Ω V/A
| Electric resistance |
| pascal |
Pa N/m^2
| Pressure, stress |
| pascal second |
PA ⋅ s
| Dynamic viscosity |
| radian |
rad
| Plane angle |
| radian per second |
rad/s
| Angular velocity |
| radian per second squared |
rad/s^2
| Angular aceleration |
| second |
s
| Time or time interval |
| siemens |
S A/V
| Electric conductance (1/electric resistance) |
| sievert |
Sv
| Dose equivalent (index) |
| square metre |
m^2
| Area |
| steradian |
sr
| Solid angle |
| tesla |
T Wb/m2
| Magnetic flux density |
| volt |
V W/A
| Electrical potential or potential difference, electromotive force |
| volt per metre |
V/m
| Electric field strength |
| watt |
W J/s
| Power |
| watt per metre kelvin |
W/(m⋅K)
| Thermal conductivity |
| watt per square metre |
W/m^2
| Power density, heat flux density, irrandiance |
| watt per square metre steradian |
W ⋅ m^-2 ⋅ sr^-1
| Radiance |
| watt per steradian |
W/sr
| Radiant intensity |
| weber |
Wb &nbnsp; V ⋅ s
| Magnetic flux |
Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts
Wednesday, October 24, 2012
Table of the SI units and the associated SI symbols
Tuesday, October 23, 2012
PREPARATION OF TIMBER FOR COMMERCIAL USE - 1
STAGE ONE:
The ‘felling’ of a tree, is the first stage of preparing the timber for commercial use. This is normally carried out in winter, when the tree has less moisture content. In the summer months, trees can have more then fifty percent water content. This increased weight adds to the cost of transport, handling and initial preparation for the sawmill. Even in winter, trees have a high water content.
| |
| Mature trees are selected by a forestry worker. Only older trees are chosen, allowing the younger trees to grow to maturity. Felled trees are replaced with saplings. Consequently, the forest is sustainable (it should not run out of trees). If small numbers of trees are harvested each day, a skilled forestry worker will use a chainsaw. When high numbers of trees are to be harvested, a team of forestry workers will work together felling trees. Alternative, in large forests, such as in Norway, specially designed ‘tractors’ with cutters and grabbers, will be used to fell hundreds of trees in one day. | |
| STAGE TWO: The tree trunks (logs) are stored / stacked in a clearing. Sometimes logs are stored in the forest until they are needed at the sawmill. This also allows some of the ‘free’ water content to evaporate, reducing the weight of the tree / log. | |
| STAGE THREE: The logs are transported to the sawmill, using vehicles equipped with lifting gear. In the Tropics, large numbers of logs are transported by floating them in rivers and allowing them to be carried down stream by the current, to sawmills. | |
| STAGE FOUR: At the sawmill, the logs are cut into ‘boards’ using equipment such as circular saws and bandsaws. This is called ‘conversion’. The first stage of conversion is a process called ‘breaking down’, which means rough sawing. The second stage is called ‘resawing’ and refers to more accurate / precise cutting and finishing, such as planing and further machining. Two types of rough sawing for the breaking down process, are shown below. | |
| Large circular saws are then used to further process the boards, removing the curved edges. Each processed piece of wood now looks like a board. | |
| STAGE FIVE: WHAT IS SEASONING AND WHY IS IT NECESSARY? | |
| When a tree is felled, it contains a large proportion of water / moisture. Many felled trees have forty to fifty percent water content. Seasoning of natural wood, is the process through which excess water / moisture is removed, leaving typically fifteen to twenty percent water content. Wood that has not been seasoned and still has a high water content is called ‘green wood’. Wood that has had its water content reduced is called ‘seasoned wood’. Water is held inside a tree in two ways. ‘Free Water’ is water that is held in the vessels and cells and its purpose is to distribute nutrients inside the tree. ‘Cell’ water (also known as ‘bound’ water), is an intrinsic part of the tree’s cell walls. During the seasoning process a tree loses its ‘free’ water and a high proportion of its ‘cell’ / ‘bound’ water. Seasoned wood is used to make furniture and most other wood based products, because it is less likely to ‘deform’ and ‘warp’. It can be shaped accurately with tools such as planes, saws, routers and hand tools. Adhesives can also be used with seasoned woods. On the other hand ‘green wood’ (unseasoned wood), has a tendency to warp and change shape, making it difficult to make precise products. Working with green wood is a skilled craft in its on right, requiring years of training and dedication. | |
Sunday, October 21, 2012
PLASTICS, FUELS AND CHEMICALS FROM CRUDE OIL
| Oil refineries ‘refine’ oil in massive quantities, to produce the fuels we need. These include diesel, petrol and heating oil. However, some of the raw materials we need to manufacture plastics, are also extracted from oil at the refinery. When crude oil is refined, four percent ends up as raw materials for the production of plastics. | |
| Oil is used widely for the production of plastics as it is composed of carbon and hydrogen. This is why oil is called a hydrocarbon. Oil and natural gas are the most important raw materials for plastics manufacture. To the plastics industry, Naphtha is the most important fraction distilled from crude oil. It is used in the production of a range of plastics. | |
Thursday, August 2, 2012
திருநீறு விளக்கம்
ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது.
வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.
திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.
2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு
3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு
4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.
நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.
புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
------------------------------------------------------------------------------------
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
-------------
திருநீறு அணிவதால்
தடையற்ற இறைச் சிந்தனை,
உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,
நல்வாக்கு,
நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.
இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
-----------------------------------------------------------------------------------
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்.
திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1) கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.
2) அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு
3) உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு
4) அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு
"மந்திரமாவது நீறு" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.
நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும்.
புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.
புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
--------------------------
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்
-------------
திருநீறு அணிவதால்
தடையற்ற இறைச் சிந்தனை,
உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,
நல்வாக்கு,
நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும்,
தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.
இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
--------------------------
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!
Saturday, July 21, 2012
பூமிக்கு அருகில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது
கலிபோர்னியா: பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் வாஷிங்டன் நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் இந்த புதிய கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்
புதிய கிரகமானது பூமியிலிருந்து 22 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்துக்கு 581ஜி என்று பெயரிட்டுள்ளது. பூமியைவிட இரண்டு மடங்கு பெரியதாக உள்ள இதில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இதன் மேற்பரப்பில் திரவம் உறைந்த நிலையில் இருப்பதாகவும் அவை கிரகத்துக்குள் பாய்ந்து செல்லக் கூடியதாகவும் இருக்கலாம் என்கின்றார் இக்குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்டீபன்வாட் என்ற அறிஞர்.
மேலும் ஆஸ்திரேலியாவில் என்ன மாதிரியான காலநிலையை உணரமுடியுமோ அதே ஒரு சூழலை இந்த கிரகத்தில் உணர முடியும் என்கின்றனர்.
Thursday, July 19, 2012
iBrain Translates Brain Activity to Word
Stephen Hawking is helping to trial a new device that could allow him to communicate by reading his brain activity alone.
The iBrain, which received the 2010 award for the Most Innovative New Product, is able to record brain activity from a single point on the scalp, with useful information about the activity extracted by an algorithm. In preliminary trials, Hawking was asked to imagine moving his hands or feet, and the team was able to identify which movement he was thinking of based on the changes in his brain activity.
The next step will be to develop the technology to the point that will allow people to use imagined movements to instruct a computer to speak words or write. 
Thanks to M.Mahanram
ஆடி என பெயர் வந்தது ஏன்?
பவுர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில்அனுஷத்திலும்பவுர்ணமி அமையும். ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பவுர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம்,பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது பூராடம் என்றும், உத்தர ஆஷாடம் உத்திராடம் என்றும் சொல்லப்படுகிறது. உத்திரஆஷாடத்தில் பவுர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் ஆஷாடீ எனப்பட்டது. அதுவே தமிழில் ஆடி என்று மருவி விட்டதாகச் சொல்வர். |
ஆடியில் வித்தியாசமான விழாக்கள்:
ஆடி மாதத்தில் எல்லா கோயில்களுமே திருவிழா காணும். என்றாலும் சில கோயில்களில் வித்தியாசமான விழாக்கள் நடக்கும்.
கோயம்புத்தூர் ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் முப்பெரும் தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ஆடிமாதத்தில் இம் மூன்று தேவிகளுக்கும், முதல் மூன்று வாரங்கள் பூக்களாலேயே தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் பல வகைப் பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கு வரலட்சுமி நோன்பு விழா நடத்துவார்கள். அப்போது மாங்கல்ய சரடு வைத்து பூஜித்து கோயிலு<க்கு வரும் பெண்களுக்கு வழங்குவர்.
சேலம் ஏழு பேட்டைகளில் நடைபெறும் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா நடக்கும். இங்குள்ள அன்னதானப்பட்டியில் ஆடிப் பெருவிழாவின்போது பொங்கல் படையலும், குகை மாரியம்மன் கோயிலில் வண்டி வேடிக்கை விழாவும் மிகவும் சிறப்பானது. செருப்படி விழாவன்று வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து கோயில் பூசாரியிடம் தருவார்கள். பூசாரி, அந்த செருப்பினால் பக்தர்கள் தலையில் ஒருமுறை லேசாகத் தட்டுவார். இப்படிச் செய்வதால் தீவினை, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சேத்து முட்டிவிழா நாளில் உடல் முழுதும் சேறு பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். அதற்கு அடுத்த விழா சங்கராபரண விழா. இப்படி விழாக்களை விதம் விதமாக சேலத்தில் நடத்துகின்றனர்.
புதுச்சேரி அருகே வங்கக்கடலோரம் செங்கழுநீர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா விமரிசையாய் நடத்துவர். புதுச்சேரி கவர்னரே அன்று இங்கு வந்து தேர்வடம் பிடித்து விழாவைத் தொடங்கி வைப்பார். இதை அரசு விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறையும் விடுவார்கள்.
கேரள மாநில ஆலப்புழையில் தண்ணீர் முக்கம் பஞ்சாயத்து மருந்தோர் வட்டம் என்ற ஊரில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மட்டும் காய்கறி பிரசாதம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ரத்த சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாதித் திருநாள் மகாராஜா இதை உட்கொண்டு நோய் நீங்கியுள்ளார் என்பர். கடுமையான அரிப்பு தரும் காட்டு சேப்பங்கிழங்கு இலைத் தண்டுகளை நறுக்கி அதனுடன் சில பொருட்கள் சேர்த்து செய்யப்படும் பிரசாதம் இது.
உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகா தேவிக்கு சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் கூழும் தந்து உபசரித்தனர். இந்நிகழ்வு நடந்தது ஆடி மாதத்தில் எனவே தான் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் வேப்பிலை ஆடை அணிந்தும், கூழ் வார்த்தும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
நாச்சியார் கோயில் கருடன் கருங்கல்லால் வடிக்கப்பட்ட பெரிய திருமேனி கொண்டவர். தன் திருமேனியில் ஒன்பது நாகங்களை அணிந்துள்ளார். இவருக்கு அமிர்தகலசம் நிவேதித்து வணங்க. நவகிரகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகள் விலகும்.
திருநின்றவூர் நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து, மஞ்சளாடை தரித்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுகின்றனர்.
செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பர், அன்று மாலை அம்மன் புற்றுக் கோயிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைவாள். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் பூங்கரகத்தின் முன் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
திருவாலங்காட்டு வண்டார்குழலி அம்மனுக்கு ஆடியில் வளைகாப்பு உற்சவம் நடத்துவர். அந்த வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால் மகப்பேறு கிட்டுகிறது.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யா பூஜை முறைப்படி விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் உள்ள கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கையின் முழு உருவத்தையும் ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 வரை மட்டுமே தரிசிக்கலாம், மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளிகளில் ஒன்பது அர்ச்சகர்கள் ஒன்பது வித மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வது நவசக்தி அர்ச்சனை என போற்றப்படுகிறது.
திருச்சிக்கு அருகே திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் ஆதவன் தன் கிரணங்களால் அங்கு அருளும் ஈசனை வழிபடுகிறான். காசி போன்ற விமானம் கொண்ட ஆலயம் இது.
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர். ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம். இந்த விழாவில் இவ்வூரின் கிழக்கு எல்லையில் உள்ள மாங்குளம் குளக்கரையிலிருந்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பக்தர்கள் தங்களை மலர்களாலும் சந்தனத்தாலும் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களாலும் அலங்கரித்துக் கொண்டு தீ மிதிக்கத் தயாராவார்கள். இவர்கள் குமாரமக்கள் என அழைக்கப்படுவர். ஆத்மார்த்தமான பக்தியோடும் தீ மிதிப்பவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து அருள்கிறார்கள் அன்னை.
ஆடி மாதத்தில் எல்லா கோயில்களுமே திருவிழா காணும். என்றாலும் சில கோயில்களில் வித்தியாசமான விழாக்கள் நடக்கும்.
கோயம்புத்தூர் ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் முப்பெரும் தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ஆடிமாதத்தில் இம் மூன்று தேவிகளுக்கும், முதல் மூன்று வாரங்கள் பூக்களாலேயே தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் பல வகைப் பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளிக்கிழமையன்று இங்கு வரலட்சுமி நோன்பு விழா நடத்துவார்கள். அப்போது மாங்கல்ய சரடு வைத்து பூஜித்து கோயிலு<க்கு வரும் பெண்களுக்கு வழங்குவர்.
சேலம் ஏழு பேட்டைகளில் நடைபெறும் ஆடிப் பெருவிழா மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு பேட்டையிலும் ஒவ்வொரு விழா நடக்கும். இங்குள்ள அன்னதானப்பட்டியில் ஆடிப் பெருவிழாவின்போது பொங்கல் படையலும், குகை மாரியம்மன் கோயிலில் வண்டி வேடிக்கை விழாவும் மிகவும் சிறப்பானது. செருப்படி விழாவன்று வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் ஒரு தட்டில் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து கோயில் பூசாரியிடம் தருவார்கள். பூசாரி, அந்த செருப்பினால் பக்தர்கள் தலையில் ஒருமுறை லேசாகத் தட்டுவார். இப்படிச் செய்வதால் தீவினை, தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சேத்து முட்டிவிழா நாளில் உடல் முழுதும் சேறு பூசிக் கொண்டு வந்து அம்மனை வணங்குவார்கள். அதற்கு அடுத்த விழா சங்கராபரண விழா. இப்படி விழாக்களை விதம் விதமாக சேலத்தில் நடத்துகின்றனர்.
புதுச்சேரி அருகே வங்கக்கடலோரம் செங்கழுநீர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாத ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா விமரிசையாய் நடத்துவர். புதுச்சேரி கவர்னரே அன்று இங்கு வந்து தேர்வடம் பிடித்து விழாவைத் தொடங்கி வைப்பார். இதை அரசு விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறையும் விடுவார்கள்.
கேரள மாநில ஆலப்புழையில் தண்ணீர் முக்கம் பஞ்சாயத்து மருந்தோர் வட்டம் என்ற ஊரில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் ஆடி மாதம் வரும் அமாவாசையன்று மட்டும் காய்கறி பிரசாதம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ரத்த சம்பந்தமான நோய்களை குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாதித் திருநாள் மகாராஜா இதை உட்கொண்டு நோய் நீங்கியுள்ளார் என்பர். கடுமையான அரிப்பு தரும் காட்டு சேப்பங்கிழங்கு இலைத் தண்டுகளை நறுக்கி அதனுடன் சில பொருட்கள் சேர்த்து செய்யப்படும் பிரசாதம் இது.
உடலெல்லாம் தீக்காயங்களுடன் வந்த ரேணுகா தேவிக்கு சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை ஆடையும் கூழும் தந்து உபசரித்தனர். இந்நிகழ்வு நடந்தது ஆடி மாதத்தில் எனவே தான் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் வேப்பிலை ஆடை அணிந்தும், கூழ் வார்த்தும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.
நாச்சியார் கோயில் கருடன் கருங்கல்லால் வடிக்கப்பட்ட பெரிய திருமேனி கொண்டவர். தன் திருமேனியில் ஒன்பது நாகங்களை அணிந்துள்ளார். இவருக்கு அமிர்தகலசம் நிவேதித்து வணங்க. நவகிரகங்களால் ஏற்படும் தீய பாதிப்புகள் விலகும்.
திருநின்றவூர் நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து, மஞ்சளாடை தரித்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுகின்றனர்.
செஞ்சிக்கோட்டைக்கு அருகில் உள்ள கமலக் கண்ணியம்மன் ஆலயத்தில் ஆடித் திருவிழாவில் பத்தாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிப்பர், அன்று மாலை அம்மன் புற்றுக் கோயிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக வந்து ஆலயத்தை அடைவாள். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் பூங்கரகத்தின் முன் தீச்சட்டி ஏந்தி வருவார்கள்.
திருவாலங்காட்டு வண்டார்குழலி அம்மனுக்கு ஆடியில் வளைகாப்பு உற்சவம் நடத்துவர். அந்த வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால் மகப்பேறு கிட்டுகிறது.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவித்யா பூஜை முறைப்படி விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் உள்ள கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கையின் முழு உருவத்தையும் ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 வரை மட்டுமே தரிசிக்கலாம், மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளிகளில் ஒன்பது அர்ச்சகர்கள் ஒன்பது வித மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சனை செய்வது நவசக்தி அர்ச்சனை என போற்றப்படுகிறது.
திருச்சிக்கு அருகே திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் ஆதவன் தன் கிரணங்களால் அங்கு அருளும் ஈசனை வழிபடுகிறான். காசி போன்ற விமானம் கொண்ட ஆலயம் இது.
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர். ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம். இந்த விழாவில் இவ்வூரின் கிழக்கு எல்லையில் உள்ள மாங்குளம் குளக்கரையிலிருந்து சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பக்தர்கள் தங்களை மலர்களாலும் சந்தனத்தாலும் மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களாலும் அலங்கரித்துக் கொண்டு தீ மிதிக்கத் தயாராவார்கள். இவர்கள் குமாரமக்கள் என அழைக்கப்படுவர். ஆத்மார்த்தமான பக்தியோடும் தீ மிதிப்பவர்களின் வாழ்வில் வளம் சேர்த்து அருள்கிறார்கள் அன்னை.
Thursday, July 12, 2012
வான்வெளியிலிருந்து பாயும் நியூட்ரினோக்கள்.. 'பிடிக்க' மதுரைக்கு அருகே ஆராய்ச்சி மையம்!
-ஏ.கே.கான்
மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நுழைந்து வெளியேறுகின்றன.
இந்தத் துகளை ஆய்வு செய்தால் சூரியன், விண்மீன்கள் உள்பட விண்வெளியின் பல ரகசியங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ஒரு விண்மீன் இறக்கும்போது, முதலில் அது உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். அப்போது அதன் மையப் பகுதி பல லட்சம் மடங்கு விரிவடையும். அந்த நேரத்தில் நட்சத்திரத்தின் மையப் பகுதியில் அளவிட முடியாத அளவுக்கு மாபெரும் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தத்தில் இருந்து எந்த ஒரு பொருளும், ஒரு அணு கூட வெளியே 'எஸ்கேப்' ஆக முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மரணிக்கும் நட்சத்திரத்திலிருந்து கூட தப்பி வரும் ஒரே துணை அணுத் துகள் நியூட்ரினோ மட்டும்.
எனவே, நியூட்ரினோவைப் பற்றி கொஞ்சம் நன்றாக ஆராய்ந்தால் பல்வேறு ரகசியங்களுக்கு, நட்சத்திரம் ஏன் இறக்கிறது என்பதில் ஆரம்பித்து, விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால், இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' அவ்வளவு எளிதல்ல, மிக மிகக் கடினம். எந்தப் பொருளோடும் 'ரியாக்ட்' செய்யாத தன்மை கொண்ட நியூட்ரினோக்களை பரிசுத்தமான நீரில் தான் 'பிடிக்க' முடியும் என்பதால் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போல ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும். ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.
இந் நிலையில் இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. முதலில் நீலகிரி மலைப் பகுதியில் இதற்கான ஆய்வகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு மழைப் பொழிவு அதிகம் என்பதால் மதுரைக்கு அருகே தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் அம்பரப்பர் கோவில் கரடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மிகப் பழமையான கற்பாறைகள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் இந்த ஆய்வுக் கூடம் அமைக்க மிக ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றதாக உள்ளது. எனவே இப்பகுதியை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.
பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையமும், மும்பை Tata Institute of Fundamental Research (TIFR), Saha Institute of Nuclear Physics (SINP), கொல்கத்தா Variable Energy Cyclotron Centre (VECC), சென்னை ஐஐடி இயற்பியல் பிரிவு உள்பட ஏகப்பட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளன.
சுமார் ரூ. 1,250 கோடி செலவில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இப்போதைக்கு இதற்கு India-based Neutrino Observatory என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்க National Centre for High Energy Physics என்ற ஒரு இயற்பியல் ஆராய்ச்சிப் பிரிவும் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. (இங்கு வேலை செய்ய ஆட்களைக் கூட எடுத்து வருகிறார்கள்.. பார்க்க http://www.ino.tifr.res.in/ino//career.php).
கிட்டத்தட்ட 4,300 அடிக்கு ஆழத்தில் மாபெரும் சுரங்கம் அமைத்து அதில் 50,000 டன் எடை கொண்ட மாபெரும் காந்தங்களை பொறுத்தவுள்ளனர். இவை ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க ஜெனீவாவில் உள்ள CERN சுரங்க ஆராய்ச்சி மையத்தில் பொறுத்தப்பட்ட காந்தங்களை விட 4 மடங்கு அதிக சக்தியும், எடையும் கொண்டவை.
மேலும் தேனியில் அமையும் இந்த சுரங்கத்துக்குள் பொறுத்த 50,000 டன் இரும்பு பிளேட்களும் (soft iron plates) தேவைப்படும். இவற்றை மத்திய அரசின் Steel Authority of India எஃகு நிறுவனத்தின் பிலாய் தொழிற்சாலை தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த 50,000 டன் காந்தங்களைக் கொண்டு magnetized iron calorimeter (MIC) என்ற கருவியை உருவாக்கி நியூட்ரினோக்களைப் பிடித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காந்தங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய காந்தங்களாக இருக்கும் என்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஜெனீவாவில் நடந்த 'ஹிக்ஸ் போஸான்' மாதிரியான ஒரு மாபெரும் ஆராய்ச்சி நம்ம 'மதுரக்கி பக்கத்துல' நடக்கவிருக்கிறது!
Wednesday, July 4, 2012
ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!
for english
see video
கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.
Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.
இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.
ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத 'சூப்பர் ஸ்டார்' தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.
இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.
இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.
அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.
ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி. அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.
இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.
ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், 0.1% கேள்வி இன்னமும் மிச்சமிருக்கிறது...!
Monday, July 2, 2012
உங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள் பார்க்க எளிய வழி!
ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவர் குடும்பங்களில் புதுமனை புகுதல், காதுகுத்துதல், திருமணம் என்று ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். ஒரு சிலர் ஏதாவது ஒரு ஜோசியர் அல்லது கோயில் குருக்களிடம் கேட்டு நல்ல நாள் குறிப்பார்கள். மேல்நோக்கு நாள், அமிர்தயோக நாள், சுபமுகூர்த்த நாள் என பொதுவாகப் பார்த்து நாள் குறிக்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றை அடிப்டையாகக் கொண்டு நாமே நல்ல நாள் பார்க்கலாம்.
நாள் என்ன செய்யும்?
நாள் (வாரம்), திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் என்ற ஐந்தும் சேர்ந்ததே பஞ்சாங்கம். இந்த ஐந்தும் அடங்கிய பஞ்சாங்கத்தில் முதல் அங்கமாக வருவது வாரம் அதாவது கிழமை அல்லது நாட்கள். பஞ்சாங்கத்தில் நம் முன்னோர்கள் என்றைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பதற்குக் கூட நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் திருமணம், ஹோமம், சாந்திகள் போன்ற நற்காரியங்களுக்கு விசேஷமானவை. செவ்வாய் நெருப்பு கிரகம் என்பதால் செவ்வாய்க் கிழமை அக்னி சம்பந்தமான செயல்களுக்குரியது. சனிக்கிழமை இயந்திர சம்பந்தமான பணிகளுக்கு உரிய நாள்.
ஞாயிற்றுக்கிழமை: சூரியன் ஆரோக்கியத்தை அளிப்பவன். அதனால் நீண்டகால பிணிகளுக்கு மருத்துவர் ஆலோசனை பெற்று மருந்து உண்ண ஆரம்பிக்கலாம். வடக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். அரசுப்பணித் தொடர்பான விஷயங்களுக்காக உரிய அலுவலர்களை நேரில் சந்திக்கலாம்.
திங்கட்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். கிருகப் பிரவேசம் நடத்தலாம். காதுகுத்துதல், பெண் பார்த்தல், ருது சாந்தி செய்தல் (சாந்தி முகூர்த்தம்), சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற விசேஷங்களை செய்யலாம். ஆடுமாடு வாங்குதல், விதையிடுதல், உரமிடல், வியாபராம் துவங்குதல் ஆகியவையும் செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை: கிழக்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். வாங்கிய கடனை அடைத்தல், வயலுக்கு உரமிடல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல் ஆகியன செய்ய ஏற்ற நாள் இது. செவ்வாய்க்கிழமைகளில் பொருள் வாங்கினால் அது வருவாயைப் பெருக்கும். அதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
புதன் கிழமை: மேற்கு திசை நோக்கி பயணம் செய்யலாம். புதிய ஆராய்ச்சி, எழுத்துப் பணிகளைத் துவங்கலாம். வழக்குகள் சம்பந்தமாக வழக்கறிஞரை சந்தித்தல், புதுமனை புகுதுல், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல், காது குத்துதல், சீமந்தம், விருந்து உண்ணல் போன்ற சுபகாரியங்கள் செய்யலாம். கல்வி, கலை போன்றவற்றைக் கற்க ஆரம்பித்தல் ஆகியவற்றுக்கு ஏற்ற நாள் இது.
வியாழக்கிழமை: மேற்குதிசையில் பயணிக்கலாம். புதிய பணியில் சேரலாம். வங்கிப் பணிகள் கவனித்தல், பெரிய மனிதர்களை சந்தித்தல், சீமந்தம், ருது சாந்தி, காது குத்துதல், கிருகப் பிரவேசம், விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் இவற்றைச் செய்ய ஏற்ற தினம்.
வெள்ளிக்கிழமை: வடதிசை நோக்கி பயணம் செய்யலாம். பெண் பார்க்கச் செல்லலாம். காது குத்துதல், சாந்தி முகூர்த்தம், புதிய வாகனங்கள் வாங்குதல், நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
சனிக்கிழமை: தென்திசை நோக்கி பயணம் செய்யலாம். பூமி தொடர்பான விஷயங்கள் அதாவது வீடு, நிலம், மனை வாங்குதல், விற்றல் போன்ற செயல்களுக்கும், இயந்திரங்கள் வாங்குதல் போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் உகந்த நாள்.
திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களை சுபநாட்கள் எனவும்; ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களை அசுப நாட்கள் எனவும் சிலர் கூறுவர். சுப நாட்களிலும் பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது. சில கிழமைகளில் வரும் நட்சத்திரங்களைப் பொறுத்தும் அன்று சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
ஞாயிறு-பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
திங்கள்-சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய்-உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன்-அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன்-கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி-பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி-ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஆகிய நட்சத்திரங்கள் வரும் கிழமைகள் சுபகாரியம் செய்ய ஏற்றவை அல்ல.
திதிகள்: திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன. அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும்.
நற்பலன் தரும் திதிகள்: ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்: ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.
வளர்பிறை காலம் : அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
தேய்பிறை காலம் : துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி திதிகள்.
ஒரு கண்ணுள்ள திதிகள்: வளர்பிறை, தேய்பிறை காலங்களில் சில திதிகளுக்கு ஒரு கண்மட்டுமே உண்டு. அதாவது இந்த சமயத்தில் செய்யப்படும் செயல்கள் பூரண பலன் தராது. எனவே இத்திதிகளில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது. அந்தத் திதி காலங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்பிறை தேய்பிறை
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி .....
பஞ்சமி பிரதமை
சஷ்டி அஷ்டமி
சப்தமி நவமி
சதுர்த்தசி தசமி
பவுர்ணமி .....
பொதுவாக பலரும் தவிர்க்கும் திதிகள்: வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலுமே அஷ்டமி, நவமி திதிகளையுமே தவிர்ப்பர். அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் ஆகாத திதிகளாகும். இவ்விரண்டு திதிகள் வரும் நாட்களில் எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவங்கினாலும் பொருள் நஷ்டம், எதிர்ப்பு, விரோதம், நோய் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்.
நட்சத்திர பலன்கள்: பொதுவாக ஒரு குழந்தை பிறந்ததுமே பலரும் பார்ப்பது அன்று என்ன நட்சத்திரம் என்பதைத் தான். காரணம், ஜோதிட ரீதியான 27 நட்சத்திரங்களுள் ஏதாவது ஒன்றுதான் எல்லோருடைய வாழ்க்கையிலுமே ஆதிக்கம் செலுத்தும். அது அவரவர் பிறந்ததினத்தில் அமையும் நட்சத்திரமே. தனிப்பட்ட நபருக்கு உரியது என்றில்லாமல் பொதுவாக எல்லோருக்கும் நன்மை அளிப்பன என்றும் ஆகாதவை எனவும் சில நட்சத்திரங்கள் கூறப்பட்டுள்ளன. திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதேநாட்களில் வெளியூர்ப் பிரயாணம் மேற்கொள்வது கூடாது. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் அன்று சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடாது.
யோகங்கள்: பொதுவாக பலருக்கும் தெரிந்தது அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் எனும் மூன்று யோகங்கள். இந்த யோகங்கள் நட்சத்திரங்களின் அடிப்படையில் கணிக்கப்படுபவை. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களைத் தரக்கூடியவையாகும். அசுவினி-புதன், மிருகசீரிஷம்-வியாழன், பூசம்-வெள்ளி, சித்திரை-சனி, அனுஷம்-ஞாயிறு, மூலம்-புதன், உத்திராடம்-திங்கள், திருவோணம்-வெள்ளி இந்த நட்சத்திரங்கள் இந்தக் கிழமைகளில் வருவதைத் தவிர, இதர கிழமைகளில் எல்லாம் நற்பலன்களை கொடுக்கக்கூடியவையாகும்.
ராகுகாலம்: சர்ப்ப கிரகங்கள், சாயா கிரகங்கள் என்றெல்லாம் அழைக்கப்படுபவை ராகு, கேது கிரகங்கள். ஒவ்வொரு நாளிலும் சுமார் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. ராகு காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நலம். கூடிய வரையில் இயன்றவரை அந்த சமயத்தில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
ராகுகாலம் என்று எப்போது?
ஞாயிறு 4.30 மணி முதல் 6 மணி வரை
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.
திங்கள் 7.30 மணி முதல் 9 மணி வரை
செவ்வாய் 3 மணி முதல் 4.30 மணி வரை
புதன் 12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன் 1.30 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 10.30 மணி முதல் 12 மணி வரை
சனி 9 மணி முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்
எமகண்டம் என்பது மரணத்திற்கு சமமான விளைவினை ஏற்படுத்தக்கூடியது எனக்கருதப்படுகிறது. எமகண்ட நேரத்தில் ஒரு செயலை மேற்கொள்வது ஆபத்து. விபத்து, பிரச்னைகள் ஆகியவற்றை உருவாக்கும். இரவில் வரும் எமகண்ட காலத்தில் துவக்கும் காரியங்கள்கூட எதிர்மறை விளைவையே தரும். பகலில் வரும் எமகண்ட நேரம் பலருக்கும் தெரிந்திருக்கும். இங்கே ஒவ்வொரு நாளிலும் இரு வேளைகளிலும் வரும் எமகண்ட நேரத்தின் பட்டியல் இதோ...
கிழமை பகல் நேரம் இரவு நேரம்
ஞாயிறு 12.00-1.30 6.00-7.30
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00
திங்கள் 10.30-12.00 3.00-4.30
செவ்வாய் 9.00-10.30 1.30-3.00
புதன் 7.30-9.00 12.00-1.30
வியாழன் 6.00-7.30 10.30-12.00
வெள்ளி 3.00-4.30 9.00-10.30
சனி 1.30-3.00 7.30-9.00
குளிகன் அல்லது குளிகை காலம்: குளிகன், சனிபகவானின் மகன் எனச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தக் குளிகனுக்கென ஒவ்வொரு நாளிலும் ஒதுக்கப்பட்டுள்ள நேரமே குளிகை காலம். தினசரி பகலில் ஒன்றரை மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் நடைபெறும். குளிகை காலத்தில் நற்காரியங்களை மட்டுமே செய்யலாம். ஏனெனில் இந்த நேரத்தில் செய்யப்படும் செயல் தடை இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என்பது நியதி. எனவே அசுப காரியங்களைத் தவிர்ப்பது அவசியம்.
கரிநாள்: ஒவ்வொரு வருடமும் வரும் 365 நாட்களில் 34 நாட்கள் கரி நாளாக அமையும். இந்த நாட்களில் சுபகாரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாதம் தேதிகள்
சித்திரை 6, 15
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19
வைகாசி 7, 16, 17
ஆனி 1, 6
ஆடி 2, 10, 20
ஆவணி 2, 9, 28
புரட்டாசி 16, 29
ஐப்பசி 6, 20
கார்த்திகை 1, 10, 17
மார்கழி 6, 9, 11
தை 1, 2, 3, 11, 17
மாசி 15, 16, 17
பங்குனி 6, 5, 19
வாரசூலை: வாரசூலைக்கு சூலதோஷம் என்றும் பெயர். வாரசூலையை நிருவாணி சூலம் என்றும் களரி காலன் என்றும் அழைப்பதுண்டு. பகலில் வாரசூலை நேர் திசைகளிலும் இரவில் மூலை திசைகளிலும் இடம்பெற்று இருக்கும் என்பது ஜோதிட நியதி. வாரசூலை உள்ள திசையை நோக்கிப் பயணம் செய்வது கூடாது. அவசியம் பயணம் செய்ய வேண்டுமென்றால் பரிகாரம் மேற்கொண்டு பிரயாணம் செய்யலாம். வார சூலைக்கான பரிகாரம் செய்வது குறிப்பிட்ட பரிகாரப் பொருளை சிறிதளவு உண்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவது தான். சிலர் அப்பொருளை தானம் செய்வது வழக்கம்.
தின ஓரையில் பயன்கள்: ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது. உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்.
சந்திராஷ்டமம்: நம் ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொருவருடைய ஜனன கால ஜாதகமும் சந்திரனை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒருவர் பிறந்த போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ, அதுவே அவரது ஜனன ராசி என்றும், சந்திர லக்கினம் என்றும் கூறப்படுகிறது. கோள்களின் இயக்கத்தின் படி அதாவது கோசாரத்தின்படி சந்திரன் ஒருவரது ஜனன ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் காலமே அவரது சந்திராஷ்டம காலம் ஆகும். சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசிக்கு உரிய இரண்டேகால் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் அந்த சந்திராஷ்டம நாட்களில் அந்த நபர் இயன்றவரை புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். அவருக்கான சுபகாரியங்களை அதாவது திருமணம், பெண் பார்த்தல், பணியில் சேருதல் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. திட்டமிடாத திடீர் பயணங்களையும் வெளிநாடு, வெளியூர் பிரயாணங்களையும் தவிர்ப்பது அவசியம்.
(உதாரணமாக.. மேஷ ராசியினருக்கு எட்டாம் இடமான விருச்சிக ராசிக்கு உரிய விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் சந்திரன் வரும் தினங்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.)
2 அமாவாசை 2 பவுர்ணமி: அமாவாசை ஒரு நல்லநாள் என்றாலும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு உகந்ததல்ல. அமாவாசையை விலக்குவதைப் போலவே ஒரே மாதத்தில் இரு அமாவாசை வந்தால் அதனை மல மாதம் என்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பு அநேகமாக 18 வருடங்களுக்கு ஒரு முறையே வரும். மல மாதத்தினை மட்டுமல்லாமல், மல மாதமுள்ள தமிழ் ஆண்டும் திருமணம் போன்ற நற்காரியங்களுக்கு ஏற்றதல்ல என்பது பொதுவிதி. ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வந்தால் அதுவும் மலமாதமே. ஆனால் பவுர்ணமி திதியில் சுபகாரியங்கள் மட்டுமே செய்யப்படுவதால் அந்த மாதத்தினை விலக்குவது இல்லை.
கல்யாணத்திற்கு நாள் பார்ப்பது எப்படி?
1. முதல் விதி, திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
2. அடுத்ததாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. புதன், வியாழன், வெள்ளி போன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிகமிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. இது 4வது விதி.
5. அடுத்த வித... ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்.
6. துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது ஆறாவது விதி.
7. அடுத்ததாக முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
8. அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. இது 9வது விதி.
9. திருமணத்தின்போது குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது என்பது 10ம் விதி.
10. திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
11. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது என்பது 12வது விதி.
12. கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். அனைத்துக் காரியங்களும் தடையின்றி இனிதே நிறைவேறிட இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
Subscribe to:
Comments (Atom)

